TamilSaaga

“சிங்கப்பூர் Bionix வழக்கில் கொல்லப்பட்ட NSF அதிகாரி” – SAF அதிகாரிக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்க வாய்ப்பு

சிங்கப்பூரின் பயோனிக்ஸ் காலாட்படை வாகனம் ஒன்று பின்னோக்கி சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த லேண்ட் ரோவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த லேண்ட் ரோவர் ஓட்டுநர் மரணமடைந்தார். ஓட்டுனரைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கப்பூர் ஆயுதப் படை (SAF) கேப்டனுக்கு அடுத்த மாதம் புதிய வழக்கறிஞரை ஈடுபடுத்திய பிறகு தண்டனை விதிக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : மாடியில் இருந்து சைக்கிளை வீசிய நபர்

கேப்டன் ஓங் லின் ஜியின் தரப்பு வழக்கறிஞராக இப்போது ட்ரைடென்ட் லாவில் இருந்து திரு. ஆர். திருமுருகன் ஆஜராகின்றார். 30 வயதான அந்த சிங்கப்பூரரை இதற்கு முன்பு வழக்கறிஞர் திரு. தியோ சூ கீ பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 20), திரு. திருமுருகன், மாவட்ட நீதிபதி ஜஸ்வேந்தர் கவுரிடம், இந்த வழக்கை கடந்த வெள்ளியன்று தான் எடுத்துக் கொண்டதாகவும், அதைக் கவனிக்க கூடுதல் அவகாசம் தேவை என்றும் கூறினார்.

இதனால் ஓங்கின் வழக்கு இப்போது அவரது தணிப்பு மற்றும் தண்டனைக்காக அடுத்த ஆண்டு ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், நீதிபதி கவுர், 22 வயதான முழுநேர தேசிய சேவையாளர் (NSF) கார்போரல் முதல் வகுப்பு (CFC) லியு கையின் மரணத்திற்கு வழிவகுத்த ஒரு மோசமான செயலைச் செய்ததாக அவரைத் தண்டித்தார். கடந்த நவம்பர் 3, 2018 அன்று 42 வது பட்டாலியன் சிங்கப்பூர் கவசப் படைப்பிரிவின் பயிற்சியின் போது இந்த சோகம் நடந்தது என்பதும் நினைவுகூரத்தக்கது.

அந்த லேண்ட் ரோவர் மற்றும் பயோனிக்ஸ் இடையே 30 மீ பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்க தவறியதன் மூலம் ஓங் அவசரமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில் ஆர்மர் பயிற்சி நிறுவனத்தில் ஆர்மர் யூனிட் பயிற்சி மையத்தில் ஒரு படைப்பிரிவு பயிற்சியாளராக இருந்த ஓங், லேண்ட் ரோவர் பாதுகாப்பற்றதாக இருந்தாலும், மற்ற வாகனத்துடன் தொடர்பு கொள்ளாமல் முன்னோக்கி நகர்த்துவதற்கான உத்தரவை வழங்கினார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts