TamilSaaga

“சிங்கப்பூரில் விதிகளை மீறாதீர்கள்”.. ரோபோக்கள் உங்களை கண்காணிக்கிறது – களமிறங்கும் “XAVIER”

சிங்கப்பூரில் பொதுவெளியில் மோசமான பொது நடத்தைகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ தனது பணியை தற்போது தொடங்கியுள்ளது. சேவியர் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) தொடங்கி மூன்று வார சோதனையின் ஒரு பகுதியாக டோ பயோ சென்ட்ரலில் உள்ள இடங்களில் தனது சுற்றுப்பயணத்தை நடந்தும்.

இந்த ரோபோக்களில் இரண்டு, சட்டவிரோத விற்பனையாளர்கள், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைப்பிடிப்பவர்கள், நடைபாதையில் தவறான மோட்டார் சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர் சவாரி செய்பவர்கள் மற்றும் குழு அளவுகளில் தற்போதைய வரம்புகளை மீறும் கூட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

360 டிகிரி பார்வை கொண்ட மற்றும் இருட்டில் பார்க்கக்கூடிய கேமராக்கள் மூலம் இந்த ரோபோக்கள் செயல்படுகிறது. ரோபோவால் இந்த “விரும்பத்தகாத சமூக நடத்தைகள்” குறித்து உண்மையான நேரத்தில் பொது அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற நடத்தைக்கு எதிராக பொதுமக்களுக்கு கல்வி கற்பிக்கும் செய்திகளையும் இந்த ரோபோவாள் காண்பிக்க முடியும்.

சிங்கப்பூரில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அதிக போக்குவரத்து உள்ள பொதுப் பகுதியில் ரோந்து மற்றும் சர்வே செய்யும் தானியங்கி ரோபோ பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கூட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐந்து பொது நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related posts