TamilSaaga

“சிங்கப்பூர் புங்கோல் HDB பிளாக்” : மாடியில் இருந்து சைக்கிளை வீசிய நபர் – கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்

சிங்கப்பூரில் 23 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூரர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) புங்கோலில் உள்ள வீட்டுவசதி வாரியத் குடியிருப்பிலிருந்து சைக்கிளை வீசியதாகக் கூறி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். நீதிமன்ற ஆவணங்களின்படி, ஹரிந்தேயர் என்ற அவர் மீது ஒரு மோசமான செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 5 பேர் பலி – 40,000 பேர் முகாமில் தஞ்சம்

திங்களன்று ஒரு செய்திக்குறிப்பில், கடந்த வியாழன் அன்று எட்ஜெடேல் plains பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதியில் இருந்து சைக்கிள் தூக்கி வீசப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து ஒரு புகாரைப் பெற்றதாக சிங்கப்பூ காவல்துறை தெரிவித்தது. உடனடியாக அங் மோ கியோ போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலீஸ் கேமராக்களில் இருந்த கிடைத்த படங்களின் உதவியுடன் அடுத்த நாள் அந்த சைக்கிளை தூக்கி எறிந்தவரை கைது செய்தனர்.

யாருக்கும் இந்த செயலால் காயம் ஏற்படவில்லையோ என்றாலும் இது போன்ற செயல்களால் பெரிய அளவில் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, $2,500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மற்றவர்களின் உயிருக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், சட்டத்தை அப்பட்டமாக புறக்கணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts