TamilSaaga

mRNA தடுப்பூசி : கிருமித்தொற்றால் பலியாகும் சாத்தியம் குறைவு – நிறுவனக் குழு தகவல்

சிங்கப்பூரில் mRNA தடுப்பூசியானது மக்களுக்கு பெருமளவில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியால் கிடைக்கும் நன்மைகளை உலக சுகாதார அமைப்பும், இந்த நிறுவனத்தின் ஆலோசனை குழுவும் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை பயன்படுத்திய இளைஞர்கள் மத்தியில் இதய அழற்சி நோயானது மிகவும் அரிய அளவிலே கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

mRNA தடுப்பூசிகள் பயன்பாட்டின் மூலம் நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையும், உயிர் பலியாகும் நிலையும் மிகக்குறைவு என அந்த நிறுவனத்தின் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

mRNA தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே Pfizer-BioNTech, Moderna போன்ற தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தடுப்பூசியை பயன்படுத்தி நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்ற ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை நாடிச்செல்ல அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts