சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) இரண்டு மணி நேரமாக கவனிக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலேயே இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“மீ போக் தாஹ்” என்று அழைக்கப்படும் அந்த பெண்ணின் கணவர் வெளியிட்ட முகநூல் பதிவில், “கடந்த மார்ச் 15ம் தேதி இரவு 9:30 மணியளவில் எனது மனைவி குளித்துக் கொண்டிருக்கும்போது அவரது பிறப்புறுப்பு வழியாக அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போது எனது மனைவி அவருடைய பேறுகாலத்தின் 36வது மாதத்தில் இருந்தார்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரது பதிவில், ரத்தப்போக்கு அதிகமானதும் உடனடியாக 995க்கு அழைப்பு விடுத்த அந்த பெண்ணின் கணவர், துணை மருத்துவர்கள் 10 நிமிடங்களில் தனது வீட்டை அடைந்ததாகவும் கூறியுள்ளார். இறுதியாக இரவு 10:30 மணியளவில் அவரது மனைவி NUHன் A&E துறைக்கு வந்து சேர்ந்துள்ளார். அந்த கணவரின் கூற்றுப்படி, அவரது மனைவி A&Eக்கு வந்தவுடன், பணியில் இருந்த ஒரு செவிலியர் அவரது மனைவியின் Vitalsஐ சரிபார்க்க கண்காணிப்பு சாதனத்தை பொறுத்தியுள்ளார்.