TamilSaaga

SINOVAC தடுப்பூசி செலுத்தியவர்களை தேசிய பட்டியலில் சேர்க்க முடியாது – காரணம் என்ன?

சிங்கப்பூர் Sinovac தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களின் பெயர்கள் தேசிய பட்டியலில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் உருமாறிய டெல்டா வகை வைரஸ் போன்றவைக்கு எதிராக இந்த தடுப்பூசி எந்த அளவு திறன் பெற்றது என்பது போன்ற போதிய தரவுகள் இல்லை எனவும் அதன் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் mRNA போன்ற தடுப்பூசியின் செயல் திறன்களுக்கான தரவுகள் சேகரிக்கப்படுவதாக கூறியுள்ளது.

சிங்கப்பூரில் தேசிய அளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்தி மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

Sinovac தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் மக்களுக்கு அதனை பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

Related posts