சிங்கப்பூர் ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட (Singapore Premiere League Football) போட்டி கடந்த இரண்டு மாதங்களாக கோவிட் தொற்று காரணமாக ஆளில்லா நிலையில் நடைபெற்றது.
தற்போது இந்த மாதம் மீண்டும் துவங்க இருக்கும் லீக் போட்டியில் பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முழுமையான கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு 14 நாட்கள் கடந்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 250 பேருக்கு அரங்கத்தில் விளையாட்டை காண அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அனுமதியினை பெறலாம்.