TamilSaaga
Singapore S Pass

சிங்கப்பூரின் “S பாஸ்” – 2025ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன? – Detailed ரிப்போர்ட்!

பிற நாடுகளில் இருந்து நமது சிங்கப்பூருக்கு வரும் பணியாளர்களின் உச்சபட்ச கனவு என்றால் அது S பாஸ் தான். அதிக சலுகைகளும், நல்ல சம்பளமும் தரும் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த S பாஸ் கடந்த சில ஆண்டுகளாகவே, சிங்கப்பூர் அரசு அதற்கான வழிமுறைகளை சற்று கடுமையாக்கி வருகிறது என்றே கூறலாம்.

சரி அப்படி என்னென்ன மாற்றங்கள் இந்த 2025ம் ஆண்டில் வரப்போகிறது? எதில் இந்த மாற்றம் வருகிறது என்பது குறித்த ஒரு சில முழுமையான மற்றும் முக்கியமான தகவல்களை நாம் இந்த பதிவில் காணலாம்.

S பாஸிற்கு ஏன் இவ்வளவு மவுசு?

சிங்கப்பூர் வாழ்க்கை என்பது, இன்றைய தேதியில் பல நாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு வாழ்க்கையாக மாறியுள்ளது. அதே நேரம், நமது அண்டை மற்றும் நட்பு நாடான இந்தியர்களுக்கு, சிங்கப்பூர் ஒரு இரண்டாம் தாயகமாகவே மாறியுள்ளது. அந்த வகையில் இந்தியர்களும், பிற நாட்டவரும் அதிகம் விரும்பும் ஒரு விஷயம் தான் இந்த S பாஸ்.

நிறைய சலுகைகள், குடும்பத்தினரை சிங்கப்பூர் அழைத்து வர அதிக வாய்ப்பு, நல்ல சம்பளம் என்று S பாஸின் நன்மைகள் மிக அதிகம்.

2025ம் ஆண்டில் மாறும் S பாஸிற்கான விதிகள்!

வருகின்ற 2025ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல், சிங்கப்பூர் S பாஸிற்கான சில தகுதிகளை மாற்றம் செய்யவுள்ளது நமது மனிதவள அமைச்சகம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் தனது இணையத்தில் MOM வெளியிட்டுள்ளது.

அதன்படி…

சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் இணை வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு, S Pass வைத்திருப்பவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, S Pass வைத்திருப்பவர்களுக்கான சம்பளம் மற்றும் வரிகளை MOM தொடர்ந்து உயர்த்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே S பாஸ் விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச தகுதி சம்பளம் பின்வருமாறு உயர்த்தப்படும்..

செப்டம்பர் 2025ம் முதல்..

நிதி நிறுவனம் சார்ந்த பணிகள் அல்லாது பிற பல வகையான நிறுவனங்களில், சிங்கப்பூரில் பணியாற்ற வருபவர்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியமாக 3150 முதல் அதிகபட்சமாக 4650 டாலர்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 1 செப்டம்பர் 2025 முதல் புதிய S பாஸ் அல்லது, தங்களுடைய S பாஸ்களை Renewal செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் 3300 முதல் 4800 டாலராக நிர்ணயிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

அதே நேரம் நிதி நிறுவனம் சார்ந்த பணிகளில் பணிபுரியும் (S பாஸ் வைத்திருப்பவர்கள்) ஊழியர்களுக்கு 3650-ல் இருந்து 5650 டாலர்கள் சம்பளமாக தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதியின் கீழ், அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 3,800 டாலரில் இருந்து அதிகபட்சமாக 5650 டாலர் நிர்ணயம் செய்யப்படவுள்ளதாகவும் மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

எரிசக்தி துறையில் புதிய அத்தியாயம்: சிங்கப்பூரில் உள்ள GE Vernova நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

S பாஸிற்கான வரி விகிதங்களில் மாற்றங்கள்!

செப்டம்பர் 1, 2025 முதல், S பாஸ் பேசிக் மற்றும் Tier 1 தரத்தில் உள்ளவர்களுக்கு, வரி விகிதம் 550 டாலரிலிருந்து 650 டாலராக உயர்த்தப்படுகிறது. Tier 2 தரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே 650 டாலராக இருக்கும் வரிவிகிதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.

Related posts