TamilSaaga

“ரொம்ப கோவக்காரரா இருப்பார் போல”.. சிங்கப்பூரில் ஓடும் காரில் மனைவியோடு சண்டை – கடுப்பில் “காரிலிருந்து குதித்த கணவன்”

சிங்கப்பூரில் கடந்த ஜூலை 23, சனிக்கிழமை அன்று காலை டாங்லின் பகுதியில் ஒரு தனியார் வாடகை வாகனத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தையுடன் பயணித்த ஒரு ஆண் பயணி, திடீரென்று ஓடும் காரில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நபரின் இந்த திடீர் செயல்கள் அந்த கார் ஓட்டுனரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பின்னர் அந்த ஓட்டுநர் அங்கு நடந்தவற்றை விவரிக்க சில புகைப்படங்களை PHV டிரைவர்கள் என்ற பேஸ்புக் குழுவில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

“எனது காரில் பயணம் செய்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதாவது கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை. காருக்குள் எரியத்திலிருந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்த அந்த நபர், ஒரு கட்டத்தில் காரில் இருந்து கீழே குதித்தார்” என்று அந்த ஓட்டுநர் தெரிவித்தார்.

அடுத்த அதிர்ஷ்டசாலி யார்?.. சிங்கப்பூரில் நாளை நடைபெறும் TOTO Draw.. குரூப் 1 பரிசு S$10,00,000 – அலைமோதும் மக்கள் கூட்டம்

இந்த சம்பவம் குறித்து வெளியான புகைப்படங்கள், சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் அந்த தம்பதியினர் இருப்பதையும், அதே போல் ஒரு ஆம்புலன்ஸ் அந்த பகுதியின் ஓரமாக நிறுத்தப்பட்டதையும் காட்டுகிறது.

ஓட்டுநரின் கூற்றுப்படி, அவர் River Valleyயிலிருந்து அந்த தம்பதிகளையும் ஒரு குழந்தையையும் அழைத்துக் கொண்டு க்ளூனி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​​​அந்த நபர் காரில் இருந்து குதித்ததாக Asia One செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த தம்பதியினர் மாண்டரின் மொழியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், “கணவன்” என்று அவர் குறிப்பிடப்படும் அந்த நபர், திடீரென ஓடும் காரில் இருந்து குதித்ததாகவும் டிரைவர் கூறினார். பின்னர் அவர் உடனைடியாக காரை நிறுத்தி அவர் நிலை குறித்து ஆய்வு செய்துவிட்டு போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் கால் செய்துள்ளார்.

காரில் இருந்து குதித்து, சாலையில் நிலைதடுமாறி நடந்து சென்ற கணவனை பின்தொடர்ந்து சென்று சண்டையிட்டுள்ளார் அந்த மனைவி. இறுதியில் அந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமோடு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts