TamilSaaga

Exclusive : சிங்கப்பூர் – தமிழகம் : “வேகமாக தீரும் விமான டிக்கெட்டுகள்?” தாயகம் திரும்பமுடியாமல் பரிதவிக்கும் மக்கள்

கடந்த 2019ம் ஆண்டு இறுதி வரை இந்த உலகமே தனது இயல்பான வாழ்க்கையை தான் மேற்கொண்டு வந்தது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள ஒரு இறைச்சி கூடத்தில் ஏதோ ஒரு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் சீனா மக்கள் இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. காலம் கடந்தது, சீனாவை தாண்டி அந்த தொற்று வெளியே பரவாது என்று நினைத்தனர் மக்கள்.

ஆனால் 2020ம் ஆண்டு பிறந்தது WHO உலகமே கதிகலங்கும் ஒரு தகவலை அளித்தது, அது தான் உலக சுகாதாரத்திற்கு விடுக்கப்பட்ட “ரெட் அலெர்ட்”. சுமார் 21 மாதங்கள் கடந்து விட்டன, பல வகை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ஆனால் இன்னும் ஓயவில்லை மரணஓலங்கள். பல்லாயிரம் உயிர் பலிகள். லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். உலகே தனது போக்கை மாற்றியுள்ளது. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலிலும் குடும்பத்தை காக்க வெளிநாடுகளில் பாடுபடும் தொழிலாளர்கள் தற்போது தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது நமது சிங்கப்பூரை பொறுத்தவரை நிலைமை சீரடைந்து வருவதால் இந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து VTL எனப்படும் Vaccinated Travel Lane திட்டம் மூலம் ஜெர்மனி மற்றும் புருனே ஆகிய நாடுகளில் இருந்து மக்களை வரவேற்க சிங்கப்பூர் தயாராகி வருகின்றது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் பிற நாடுகளில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து மக்கள் (தனிமைப்படுத்துதல் இன்றி) வந்து செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்” நிறுவனத்தின் வழியாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த சில மாதங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சரியான நேரத்தில் விமானங்கள் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு விமானங்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த செப்டம்பர் மாதம் முழுவத்திற்குமான டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள விமானத்துறை அதிகாரிகளும் இங்கு சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு சிறப்பு விமானங்கள் இயங்க அனுமதிக்குமாறு பலர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இறப்பு போன்ற மிகமுக்கிய காரியங்களுக்கு கூட தாயகம் திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

Related posts