TamilSaaga

சிங்கப்பூரின் பிரபல கல்லூரியின் கேம்பஸில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்… போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பூரில் உள்ள பிரபல கல்லூரியின் வளாகத்தில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ரிபப்ளிக் தொழிற்கல்வி வளாகத்தில் சுமார் 49 வயதுடைய ஆணின் சடலம் கடந்த சனிக்கிழமை கிடந்ததாக போலீசாருக்கு தகவல் அழிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து வந்து இறந்தவரின் சடலம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் கல்லூரிக்கு தொடர்பு இல்லாத, வெளியிடத்தைச் சேர்ந்த நபர் என்றும் தெரியவந்துள்ளது.

கல்லூரி கேம்பஸ்க்கு வெளியே உள்ள புல் படுக்கையில் சடலம் இருந்ததாக தெரிகின்றது. இதையொட்டி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 2 மணி நேரம் கல்லூரி வளாகத்தினை பூட்டி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த நபர் ஆகஸ்ட் 2ஆம் தேதியே இறந்திருக்கலாம் என்று பிரேத பரிசோதனைக்கு பிறகு தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த ஆணின் மரணம் ஆனது இயற்கைக்கு புறம்பான முறையில் நடந்த மரணம் என்பதும் கண்டறியப்பட்டு, மரணம் எதற்காக ஏற்பட்டது என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் உள்ளே சடலம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related posts