TamilSaaga

“பல மாதங்களாக நடக்கும் வழக்கு” : தகவல்களை மறைத்த “வூஹான்” தம்பதிகள் – சிங்கப்பூரில் நடந்து என்ன?

சிங்கப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விசாரணைக்குப் பிறகு, சீனாவின் வுஹானைச் சேர்ந்த ஒரு ஆணும் அவரது மனைவியும் பெருந்தொற்று தொடர்பு ட்ரேசர்களிடமிருந்து தகவல்களைத் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சீனாவைச் சேர்ந்த 40 வயதான ஹு ஜுன், அவர் இருக்கும் இடம் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தொடர்பு ட்ரேசர்களிடமிருந்து வேண்டுமென்றே மறைத்ததற்காக தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.

36 வயதான அவரது மனைவி ஷி ஷா, தகவல்களை மறைத்தல், தவறான தகவல்களை அளித்தல் மற்றும் சுகாதார அதிகாரிக்கு முழுமையாகவும் உண்மையாகவும் பதிலளிக்கத் தவறியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றுள்ளார். சீனப் புத்தாண்டைக் குடும்பத்துடன் கொண்டாட கடந்த ஜனவரி 2020ல், பெருந்தொற்று வெடிப்பின் அசல் மையமான சீனாவின் வுஹானிலிருந்து சிங்கப்பூருக்கு ஹூ பயணம் செய்துள்ளார்.

அவர் சிங்கப்பூர் வந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவருக்கு பெருந்தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவர் தொற்றுநோயாளராக இருக்கும்போது பல்வேறு இடங்களுக்குச் சென்ற விஷயத்தை சுகாதார அதிகாரியிடம் சொல்லவில்லை. ஹோட்டல்கள், உணவகம் மற்றும் சீன தூதரகம் ஆகியவை இதில் அடங்கும். ஹூ தனது தரப்பு வாதத்தில், சுகாதார அதிகாரிகளுக்கு அந்தத் தகவல் தேவை என்பது தனக்குத் தெரியாமல் இருந்ததால், அவர் சென்ற இடங்களின் பெயர்களை நினைவுபடுத்த முடியவில்லை அல்லது பதிலளிக்க போதுமான நேரம் இல்லாததால், சில தகவல்களைத் தரவில்லை என்று கூறியுள்ளார்.

அவரது மனைவியும் தான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை என்று வாதத்தின்போது கூறியுள்ளார். ஷியும் ஹூவும் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ஆறு மாத சிறை, அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related posts