TamilSaaga

நொடியில் உடைந்த skylight panel… 8 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த ஊழியர் – சிங்கப்பூர் நிறுவனத்தின் MD-யை அழைத்து “லெஃப்ட் – ரைட்” வாங்கிய அரசு – அனைத்து பணிகளும் நிறுத்தம்!

SINGAPORE: சிங்கப்பூரின் LE FONG BUILDING SERVICES PTE. LTD. பற்றி உங்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. 50, SERANGOON NORTH AVENUE-ல் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. Waterproofing Contractor-ஆக இந்த நிறுவனமும் தனது சேவையை செய்து வருகிறது.

திறமையான & நம்பகமான Waterproofing Contractors
பெரிய அளவிலான அல்லது சிறிய அளவிலான அனைத்து Waterproofing வேலைகளிலும் தரமான வேலைப்பாடு
Waterproofing தொழில் துறையில் 10+ வருட அனுபவம்
இலவச Waterproofing ஆய்வுகள் மற்றும் சரிசெய்தல்
விலையை சமரசம் செய்யும் தரமான வேலை

ஆகிய இந்த 5 அம்சங்கள், இந்த நிறுவனத்தின் மிக முக்கிய அளவுகோலாக பார்க்கப்படுகிறது. மக்களிடையே இந்த 5 விஷயங்களை முன்வைத்தே இந்நிறுவனமும் வியாபாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த செப்.1ம் தேதி, இங்கு ஒரு விரும்பத்தகாத சம்பவம் அரங்கேறியது. இந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அங்கிருந்த skylight panel-ல் நின்று அதாவது (சூரிய ஒளி தடுக்கும் panel) மேல் ஏறி நின்று, Waterproofing பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த skylight panel திடீரென உடைய, எந்தவித பிடிமானமும் இன்றி நின்றுக் கொண்டிருந்த அந்த ஊழியர், அப்படியே 8 மீட்டர் உயரத்தில் இருந்து மேற்கூரை வழியாக கீழே விழுந்தார். இதில், அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த ஊழியருக்கு, இன்னமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிங்கை மனித வளத்துறை அமைச்சகம், “அந்த ஊழியர் உடல் முழுவதும் இவ்வளவு காயம் ஏற்பட்டும் உயிர் பிழைத்தது அவரது அதிர்ஷ்டமே. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – ஒன்றல்ல.. ரெண்டல்ல.. 21 பிரம்படி.. பின்பக்கம் நஞ்சி சிதைஞ்சு போச்சு – முதன் முறையாக “சிங்கப்பூர் பிரம்படி” அனுபவம் சொன்ன “இரும்பு மனிதன்”! இத்தனை அடி வாங்கியும் Interview-ஆ!

இதையடுத்து, Le Fong’s நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் லாம் என்பவரை அழைத்த மனித வளத்துறை அமைச்சகம், செப். 1 அன்று நிகழ்ந்த கடுமையான பணியிட விபத்து மற்றும் பணியிடத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விளக்கம் அளிக்க கோரியது.

இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பணியிடத்தை ஆய்வு செய்த MOM, அங்கு ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பற்ற பணி நடைமுறைகளை அங்கு கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அந்நிறுவனத்தின் MD-க்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்த மனிதவளத்துறை அமைச்சகம், அடுத்த 3 மாதத்துக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்கள் எவரையும் வேலைக்கு எடுக்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts