TamilSaaga

சிங்கப்பூர் மசாஜ் நிறுவனங்களில் அதிரடி சோதனை.. 6 பெண்கள் கைது – எச்சரிக்கும் காவல்துறை

சிங்கப்பூரில் கடந்த வாரம் மூன்று மசாஜ் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) இன்று திங்களன்று (அக்டோபர் 11) தெரிவித்துள்ளது.

28 முதல் 39 வயதிற்குட்பட்ட பெண்கள், இந்த மசாஜ் நிறுவனங்களுக்குள் பாலியல் சேவைகளை வழங்குவதாக அல்லது விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மசாஜ் நிறுவனங்களில் பாலியல் சேவைகளை வழங்கியதாக அல்லது விளம்பரப்படுத்தியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிறுவனங்கள் கிம் கீட் லேன், டர்ஃப் கிளப் சாலை மற்றும் சோபியா சாலையில் அமைந்திருந்தன. அக்டோபர் 5 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் இந்த சோதனைகள் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விற்பனை நிலையங்களில் ஒன்று உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

“குற்றச் செயல்களுக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

“சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் காவல்துறை கூறியுள்ளது.

Related posts