TamilSaaga

பயன்படுத்தப்பட்ட “ஆணுறை”.. கோவில் உண்டியலில் போட்ட ஆசாமி – புத்தாண்டை மறக்க முடியாத அளவுக்கு முகம் சுளிக்க வைக்கும் வாக்குமூலம்

கோயிலுக்கு செல்பவர்கள், ‘சாமி.. எனக்கு இது கொடு.. அது கொடு’ என்று வேண்டிவிட்டு, உண்டியலில் தங்களால் முடிந்த தட்சணையை போட்டுவிட்டு வருவார்கள். ஆனால், இங்கு ஒருவர் ஆணுறையை உண்டியலில் போட்டுவிட்டு வந்திருக்கிறார். இதையே ஒரு தொழிலாக வைத்திருந்திருக்கிறார் என்பது தான் கொடுமை!

ஆம்! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் ஏகப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்த நிலையில், அங்கு கோராஜானா பகுதியில் உள்ள கோவில் ஒன்றில், கடந்த டிசம்பர்.27ம் தேதி, வழக்கம் போல் பணம் மற்றும் சில்லறைகளை எண்ணுவதற்கு ஊழியர்கள் உண்டியலை திறந்திருக்கின்றனர்.

உண்டியலில் பணம் இருக்குமென்று பார்த்தால், “பயன்படுத்தப்பட்ட” ஆணுறை இருந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள், அதை எடுத்து பார்த்த போது, அது ஏற்கனவே யாரோ ஒருவரால் பயன்படுத்தப்பட்டு, அதன் பிறகு உண்டியலில் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.

“Air Suvidha” : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கட்டாயம் Apply செய்யவேண்டும் – எப்படி செய்வது ? முழு விவரம்

அனைவரும் முகம் சுழிக்க, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவையும், அப்பகுதியில் இருந்த மற்ற கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில், ஒரு மர்ம நபர், கோவில் உண்டியலில் பணத்துக்கு வேறு ஏதோ ஒரு பொருளை போடுவது தெளிவாக தெரிந்தது.

ஓரளவுக்கு உருவம் தெரிந்ததை வைத்து போலீசார் அவரை கண்டுபிடித்து கொண்டுவந்து, சிறப்பு கவனிப்பு கொடுக்க, அந்த நபர், இந்த கோவில் மட்டுமின்றி, இதுபோன்று பல கோவில் உண்டியல்களிலும் ஆணுறை போடுவதை தனது வேலையாக வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து பேசிய மங்களூர் போலீஸ் கமிஷ்னர், பல்வேறு கோவில்கள் சார்பில் அளித்த புகாரின் பேரில், அந்த நபர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதன் பிறகு, இந்த வேலையை செய்த நபரின் விவரங்கள் வெளியிடப்பட்டது. அவருடைய பெயர் தேவதாஸ் தேசாய். வயது 62. மங்களூரில் 20 வருடங்கள் வசித்து வரும் தேவதாஸுக்கு ஆட்டோ ஓட்டுவது தான் தொழில். இவர் ஏற்கனவே, தான் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வீசி வந்திருக்கிறார். தான் இதுவரை 18 கோவில் மற்றும் மசூதிகளில் ஆணுறைகளை வீசியிருக்கிறேன் என்பதையும் போலீசாரிடம் சொல்லியிருக்கிறார். சைக்கிளில் சென்றே அனைத்து ஆணுறைகளை எடுத்து வந்து உண்டியலில் போட்டுச் செல்வாராம்.

சிங்கப்பூர்.. 2022ம் ஆண்டின் முதல் வாரத்தில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

சரி.. இத்தனை ஆணுறைகளையும் பயன்படுத்தியது அவர்தானா என்றால் இல்லை… மங்களூர் முழுக்க உள்ள குப்பைகளில் இருந்து ஆணுறைகளை பொறுக்கி வந்து மசூதி மற்றும் கோவில்களில் தொடர்ச்சியாக போட்டு வருவேன் என்று கூற, போலீசாரே ஒரு நொடி தலை சுற்றி உட்கார்ந்துவிட்டனர்.

எனினும், ஒருவழியாக “ஆணுறை பொறுக்கியை” போலீசார் கண்டுபிடித்துவிட்டதால், அப்பகுதியின் மசூதி மற்றும் கோவில் ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

வெறும் ஆணுறையை போட்டிருந்தால் கூட பரவாயில்லை… பயன்படுத்தப்பட்ட ஆணுறையை போட்டுத் தான் அனைவரையும் வெலவெலக்க வைத்துவிட்டார் இந்த தேவதாஸ்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts