TamilSaaga

திடீரென மயங்கி விழுந்த கிரிக்கெட் வீராங்கனைகள் – மைதானத்தில் பரபரப்பு

மகளிர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் டி 20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

முதல் டி20 போட்டி நடத்து முடிந்து அதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்ற பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டியானது ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீராங்கனைகள் பீல்டிங்க்கில் ஈடுபட்டிருந்த போது சினெல் ஹென்றி என்பவர் முதலில் மைதானத்தில் மயக்கம் போட்டு விழுந்தார்.

அவரை தொடர்ந்து அடுத்த 10 நமிடத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த செடியன் நேஷன் என்பவரும் மயக்கம் போட்டு விழுந்தார்.

இப்படி மைதானத்தில் 10 நிமிடத்தில் தொடர்ந்து 2 வீராங்கனைகள் மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் இணையத்த வைரலாகி அதிர்வை ஏற்படுத்தின.

இன்னும் எதனால் மயக்கமடைந்தார்கள் என்ற காரணம் தெரியவில்லை.

Related posts