TamilSaaga

சிங்கப்பூரில் மதியம் வரை முடங்கிய சேவை : மக்களிடம் மன்னிப்புக் கேட்ட UOB வங்கி

சிங்கப்பூரின் UOB வங்கியின் சேவைகள் இன்று முடங்கியதால் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர். இணைய வாயிலாகவும் தொலைபேசி வழியாகவும் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நண்பகல் முதல் UOB வங்கி சேவை தடைப்பட்டதாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தங்களது முகநூல் வாயிலாக மன்னிப்பு கோரியுள்ளது UOB வங்கி.

குறிப்பிட்ட சில சேவைகள் பிற்பகல் சுமார் 3 மணியளவில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. பணம் எடுப்பதற்கான ATM இயந்திரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இணையவாசிகள் சிலர் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால் ATM இயந்திரங்கள் சீராக செயல்படுவதாக UOB நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களும் இதே பிரச்னையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts