ஜாதி, மதம், இனம் தாண்டி மனிதமே சிறந்தது என்பதை நிரூபித்த சம்பவம் இது.
மதுரையில் “ஐயா” என்று அழைக்கப்படக் கூடியவர் சுப்ரமணி. இவர் SDPI கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் முன்னாள் துணைத்தலைவரும், மதுரை வடக்கு மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினரும் ஆவார்.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2021/12/subramani.jpg)
எஸ்டிபிஐ கட்சியின் துவக்க காலத்திலிருந்தே தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்த சுப்ரமணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, சுப்ரமணி சார்ந்த மத முறைப்படி அவரது உடல் நல்லடக்கம் நடைபெற்றது.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2021/12/dies-461x1024.jpg)
அதில், எண்ணற்ற இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு, அவரது மறைவு காரணமாக கண்ணீர் விட்டு அழுதனர். கடைசிவரை அவரது இறுதிச் சடங்கில் உடனிருந்தனர்.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2021/12/ambus.jpg)
அதுமட்டுமின்றி, அவரது உடலை மெகா ஊர்வலமாக இஸ்லாமியர்கள் நடத்தினர். சுப்ரமணியின் உறவினர்களுடன் சென்று கடைசி வரை கூட நின்று இறுதிச் சடங்கை நடத்தி முடித்தனர்.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2021/12/dis-461x1024.jpg)
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பலரும், “இதுதான் எங்கள் ஹிந்து – இஸ்லாமிய உறவு. இதை யாராலும் பிரிக்க முடியாது. இதுதான் நாங்கள்” என்று கூறினர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.