TamilSaaga

“சிங்கப்பூரில் குற்றம்சாட்டப்பட்டு Bail-லில் வெளியே வந்த இளைஞர்” : மீண்டும் என்ன செய்தார் தெரியுமா?

சிங்கப்பூரில் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை காண்டாமிருக வளாகத்திற்குள் கடந்த டிசம்பர் மாதம் அத்துமீறி சென்ற நபர் போலீசாரால் அப்போது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த இளைஞர் ஜாமீனில் வெளியே வந்தபோது கஞ்சா உட்கொண்டதாகக் தற்போது கூறப்படுகிறது. 19 வயதான ரால்ப் வீ யி காய் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 13) மாவட்ட நீதிமன்றத்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் முதன்முதலில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அப்போது அவர் மீது இரண்டு அத்துமீறிய குற்றச்சாட்டுகள், நாசவேலை செய்ததாக ஒன்று என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு 15,000 வெள்ளி ஜாமீன் அந்த இளைஞனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூர் ஜாமீனில் வெளிவந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த நபர் போதை மருந்து உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று புதன்கிழமை, வீ என்ற அந்த வாலிபன் வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன் பிறகு நிபந்தனைகளை மீறியதற்காக அவரது ஜாமின் ரத்துசெய்யப்பட்டு அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார். அந்த இளைஞன் ஜாமீனில் வெளியே வந்தபோது, ​​அவர் மத்திய போதை மருந்து பணியகத்தில் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் உட்படுத்தப்பட்ட அந்த சோதனையை அவர் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

நாசவேலை, குற்றவியல் அத்துமீறல், விலங்குகளை துன்புறுத்தல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் என்று அவர் மீது தற்போது ஆறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து மேலும் தகவல்களை பெற இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related posts