TamilSaaga

டியூஷன் படிக்க வந்த மாணவனுடன் காதல்.. டீச்சர் ஏமாற்றியதால் விபரீத முடிவு – நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஆசிரியை கைது!

டியூசன் ஆசிரியை காதலை முறித்துக்கொண்டதால் விரக்தியில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 17) இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் அடியெடுத்து வைக்க இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பின் திடீரென தன் அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

டியூஷன் எடுத்த ஆசிரியை காதலை முறித்துக் கொண்டதால், விரக்தியில் வெறும் 17 வயதே ஆன பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் சேரவிருந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதியன்று தனது தோழர்களுடன் கலந்தாய்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.

பிறகு பெற்றோர்கள் முரளியை மீட்டு மருத்துவமனை கொண்டுச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க – வெறும் 9 மாதம்.. சிங்கப்பூரில் தனது வாழ்ககையையே மாற்றி சாதித்த டாக்சி டிரைவர்.. இன்று சாஃப்ட்வேர் இன்ஜினியராக லட்சங்களில் சம்பளம்!

இதைத்தொடர்ந்து, முரளியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதன்படி, அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த முரளி, அதே பள்ளியின் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்த ஷர்மிளா என்ற டீச்சர் நடத்திய டியூஷனில் 3 வருடங்களாக படித்து வந்திருக்கிறார். அப்போது, முரளிக்கும் ஷர்மிளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாகவும், இருவரும் மாணவன் – ஆசிரியை என்பதை மறந்து நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஆசிரியை ஷர்மிளாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். மாப்பிள்ளை முடிவான நிலையில், முரளியுடனான நட்பை அவர் துண்டித்திருக்கிறார். பிறகு அவருக்கு நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது.

முரளி எவ்வளவோ முறை ஷர்மிளாவை தொடர்பு கொண்டும் அவர் புறக்கணித்து வந்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முரளியின் மொபைலில் இருந்த ஃபோட்டோக்களை போலீசார் ஆய்வு செய்த நிலையில், இந்த உண்மை அனைத்தும் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியை ஷர்மிளா (அக்.11) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எல்லை மீறிய உறவு இன்று இரண்டு குடும்பங்களை பாழாக்கியுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts