TamilSaaga

“வா மாலுக்கு போகலாம்” : சிங்கப்பூரில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் – அத்துமீறிய இளைஞனுக்கு சிறை

சிங்கப்பூர் 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் சந்தித்த பிறகு, ஒரு 23 வயது இளைஞன் அந்த சிறுமியின் பள்ளி வாசலில் காத்திருந்து, அருகிலுள்ள சமூக கிளப்பில் அந்த சிறுமியுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளான். இப்போது 26 வயதாகும் ஜெரி அட்லி சைபுல் ரிஜலுக்கு நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 11) 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமியுடன் பாலியல் ஊடுருவல் குறித்த அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சத்துக்களை அவர் ஒப்புக்கொண்டார். ஆபாச வீடியோக்களை வைத்திருந்த மூன்றாவது குற்றச்சாட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

2019ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த குற்றத்தின் போது ஜெரி தேசிய சேவையில் இருந்தார் என்று நீதிமன்றம் கூறியது. இன்ஸ்டாகிராமில் இரண்டாம் நிலை 3-ல் இருந்த அந்த பாதிக்கப்பட்டவரை அந்த ஆண் அறிந்திருந்தார். சிறுமி தனக்கு 14 வயது என்றும், அவள் படிக்கும் பள்ளியின் பெயரைக் கூறியுள்ளார். இதனையடுத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் சந்திக்க முடிவு செய்தனர். ஜனவரி 2019ல், ஜெரி அந்தப் பெண்ணின் பள்ளி வாசலுக்குச் சென்று அவள் பள்ளி முடிவடையும் வரை காத்திருந்துள்ளார்.

பின்னர் அவர்கள் ஒரு ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர், வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அந்த மாலில் இருந்த ஒரு தோட்டத்தில் அரட்டை அடித்து கட்டிபிடித்துள்ளனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜெரி அந்தப் பெண்ணின் பள்ளிக்குச் சென்று அவளுக்காக மீண்டும் காத்திருந்தார். அவர் நாம் அமைதியான ஒரு இடத்திற்குச் செல்லலாம் என்றும் அதற்கு முன்பு மதிய உணவிற்கு ஒரு மாலுக்கு செல்லலாம் என்று கூறி அச்சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த ஆண் அந்த சிறுமியை ஒரு சமூக கிளப்பில் ஒதுங்கிய மாடிப்படிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் அவளை முத்தமிடத் தொடங்கினார். பின்னர் பாலியல் ரீதியான செயல்களை செய்ய அந்த பெண்ணும் அதற்கு இணங்கியுள்ளார். இதற்குப் பிறகு, அவர்கள் தங்களது உடைகளை அணிந்து தனித்தனியாக வீட்டிற்குச் சென்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு இந்த ஜோடி சில மடங்கு அதிகமாக அடிக்கடி சந்தித்துள்ளனர். ஆனால் மேலும் பாலியல் செயல்களில் ஈடுபடவில்லை.

ஒருகட்டத்தில் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாய் அவரை விசாரித்தபோது உண்மை வெளியாகியுள்ளது. அதன் பிறகு அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related posts