TamilSaaga

சிங்கப்பூரில் கொரோனாவால் பெண் ஒருவர் பலி.. 95 பேருக்கு புதிதாக கொரோனா – MOH தகவல்

சிங்கப்பூரை சேர்ந்த 58 வயது பெண்ஒருவர் நேற்று கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த சஓரிரு வாரங்களாக அதிகரிக்கும் கொரோனா தொற்றில் மேலும் ஒருவர் பலியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2, 2021 (திங்கள் கிழமை) அன்று கோவிட் -19 தொற்று காரணமாக 58 வயதான இந்த சிங்கப்பூரை சேர்ந்த பெண்மணி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இதுவரை சிங்கப்பூரில் கொரோனா தோற்று நோயால் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

இறந்த பெண்ணின் கொரோனா தோற்று பாதிப்பானது 66894ஆவது தோற்று நோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samy’s கறி உணவகத்திற்குச் சென்ற ஒரு வழக்கின் வீட்டுத் தொடர்பு மூலம் பரவிய தொற்றில் இந்த பெண்மணி பாதிக்கப்பட்டதாகவும், ஜூலை 29 அன்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

MOH தெரிவித்துள்ளபடி அந்த பெண்மணி கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடவில்லை எனவும், மேலும் அடிப்படை மருத்துவ நிலை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, சுகாதார அமைச்சகம் (MOH) சிங்கப்பூரில் புதன்கிழமை (ஆகஸ்ட் . 4) மதியம் 12 மணி நிலவரப்படி 95 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியது. இதன்மூலம் சிங்கப்பூரில் பதிவான மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 65,410 ஆக உள்ளது.

Related posts