TamilSaaga

சிங்கப்பூரில் PCR உடன் சேர்த்து இனி ART சுய பரிசோதனை – வெளிநாடு ஊழியர்களுக்காக முன்னோடி திட்டம்

சிங்கப்பூரில் இனிமேல் வெளிநாடு ஊழியர்கள் தங்குமிடத்தில் PCR பரிசோதனையுடன் ART சுய பரிசோதனை செய்யும் முன்னோடி திட்டத்தை மனிதவள அமைச்சகத்தின் கீழ் செய்ல்படும் ACE அமைப்பு துவங்கியுள்ளது.

ஏற்கனவே வெளிநாடு வாழ் ஊழியர்கள் தங்குமிடங்களில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை உள்ளது. தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக இந்த ART – Antigen Rapid Test செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வெளிநாடு வாழ் பணியாளர்களுக்கு எப்படி சரியான முறையில் சுய பரிசோதனை செய்ய வேண்டும் எப்படி அதன் முடிவுகளை அரசுக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றி பயிற்சி கொடுப்பார்கள்.

இந்த அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், சுய பரிசோதனை செய்ய தேவையான பயிற்சியும் அதிகாரிகள் மூலம் வழங்கப்படும்.

Related posts