TamilSaaga

பிப்ரவரி 1, முழுமையாக தடுப்பூசி போடலனா “நீங்க” கார் ஓட்ட முடியாது – செக் வைத்த சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சகம்

பிப்ரவரி 1, 2022 க்குள் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாத சிங்கப்பூரில் உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியாது மற்றும் அவர்களின் ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதிக்குள் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாத டாக்சி ஓட்டுநர்கள் முழுமையாக தடுப்பூசி போடும் வரை அவர்களது ஒப்பந்தங்களை (Contracts) நிறுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துக்கான மூத்த இணை அமைச்சர் அமி கோர் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 13) தெரிவித்தார். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பணியிட தடுப்பூசி நடவடிக்கைகளின்படி, பிப்ரவரியில் இருந்து பணியிடத்திற்குத் திரும்புவதற்கு, டாக்ஸி மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் போன்ற சுயதொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் ஹோட்டல் துறைகளில் வேலை செய்ய ஒரு வாய்ப்பு” – முன் அனுபவம் உள்ளவர்கள் உடனே Apply செய்யலாம்

டாக்ஸி ஓட்டுநர்கள் பொதுவாக தங்கள் வாகனங்களை டாக்ஸி ஆபரேட்டர்களிடமிருந்து வாடகைக்கு எடுக்கிறார்கள். இந்நிலையில் ஒப்பந்தங்கள் இடைநிறுத்தப்பட்டவர்கள் இடைநிறுத்தப்பட்ட காலத்தில் வாடகை செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று டாக்டர் கோர் கூறினார். சிங்கப்பூரில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸைக் கூட பெறவில்லை என்று டாக்டர் கோர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார். ஆனால் அவர்களுக்கு அதற்கான மருத்துவ நிலைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

தேசிய டாக்சி சங்கம் (NTA) மற்றும் தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் (NPHVA) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்ததாக அவர் “எங்கள் தடுப்பூசி போடப்படாத டாக்ஸி மற்றும் (தனியார் வாடகை) ஓட்டுநர்களுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது உண்மையில் அவர்களுக்கு அதிக உடல்நல ஆபத்தை ஏற்படுத்தும்,” என்று கூறினார். “எனவே, இன்னும் தடுப்பூசி போடப்படாத ஆனால் மருத்துவ ரீதியாக தகுதியான அனைத்து ஓட்டுநர்களையும் கூடிய விரைவில் அவர்களது தடுப்பூசிகளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : “நேரத்துக்கு வீட்டுக்கு வந்து தடவிகொடுக்க சொல்லும் காகம்” : சிங்கப்பூரில் HDB பிளாட்டில் அரங்கேறும் அதிசயம் – Video உள்ளே

“வரும் பிப்ரவரி 1 2022க்கு மேல் முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் டாக்சி ஓட்டுநர்களின் நிதிச் சுமையைக் குறைக்க, LTA (நிலப் போக்குவரத்து ஆணையம்) டாக்சி ஆபரேட்டர்களுடன் இணைந்து இந்த ஓட்டுநர்கள் முழுமையாக தடுப்பூசி போடும் வரை ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க அனுமதித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts