TamilSaaga

நிர்வாண வீடியோஸ்.. தமிழில் காமம் பெருக்கோடும் குறுஞ்செய்திகள்.. “இன்சூரன்ஸ்” பணத்தை குறி வைத்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் தங்களுடைய சக ஊழியர் ஒருவருக்கு பெரிய அளவில் காப்பீட்டுத் தொகை கிடைத்திருப்பதை அறிந்து, மேலும் அந்த குறிப்பிட்ட நபருக்கு “பெண் ஆசை” இருப்பதையும் உணர்ந்து அவருடைய சக ஊழியர்கள் இருவரும் அந்த நபரை ஏமாற்ற முடிவெடுத்து ஒரு பெண்ணை போல தங்களைக்கட்டிக்கொள்ள முடிவெடுத்தனர். அவர்கள் எண்ணியவாறே அவர்களுடைய இந்த திட்டம் தீவிரமடைந்தது, இருவரும் தங்கள் சக ஊழியரை வெற்றிகரமாக ஏமாற்றி சில நிர்வாண புகைப்படங்களை அவருக்கு அனுப்பி அவரிடமிருந்து S$4,000 அளவிற்கு பணத்தை பறித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “புழக்கத்தில் இருக்கு.. ஆனா இல்ல” ​- சிங்கப்பூரில் குறைந்து வருகின்றதா 5 Cent நாணயங்களின் ஆயுட்காலம்?

இந்த வழக்கில் மலேசியாவைச் சேர்ந்த ராஜகுமார் சுமுகம் (50) என்பவருக்கு, ஜனவரி 14ம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மிரட்டி பணம் பறிக்க சதி செய்ததாக அவர் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது சக குற்றவாளியான 36 வயதான சரவணன் இளங்கோவனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் ஒரு பிரம்படியும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதியன்று, அந்த இருவரும் ஒரு சக மலேசிய தொழிலாளியிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட அந்த 51 வயதுடைய நபரைப் பற்றி அவர்கள் பேசியுள்ளனர். அப்போது தண்டனை பெற்ற ராஜ்குமார், அந்த 51 வயதுடைய நபருக்கு அண்மையில் பெரிய அளவில் பணம் கிடைத்ததையும் அவருக்கு பெண் ஆசை அதிகம் உண்டு என்றும் கூறியுள்ளார். அப்போது சரவணன், ராஜ்குமாரிடம் தனக்கு அந்த நபரின் அலைபேசி எண்ணை அளிக்குமாறும் அவரை ஏமாற்றி பணம்பறிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து ப்ரியா என்ற பெண்ணைப் போல் தன்னை காட்டிகொண்ட சர்வணன், வாட்ஸ் அப் மூலம் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு message செய்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட சில நிர்வாண புகைப்படங்களை அவருக்கு அனுபத்துவங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட இந்த நபரும் அது பிரியா என்ற பெண் தான் என்று ஏமாந்து தன்னுடைய எட்டு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் எட்டு அந்தரங்க வீடியோக்களுடன் பிரியா என்ற அந்த எண்ணுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில் அவரது முகமும் அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்கள் அடங்கும்.

இதையும் படியுங்கள் : இந்திய ஊழியருக்கு அடித்த “ஜாக்பாட்” லாட்டரி – டிரைவராக வேலைப் பார்த்தவருக்கு ரூ.50 கோடி பரிசு! ஒரே இரவில் மாறிய வாழ்க்கை!

இதனையடுத்து கடந்த டிசம்பர் 1, 2020 அன்று, ராஜ்குமார், பிரியா என்ற பெண் போல நடித்துக்கொண்டிருக்கும் சரவணனை அழைத்து பேசியுள்ளார். அப்போது நீ ப்ரியாவின் கணவரை போல நடித்து அந்த நபரிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படியே அவரும் ப்ரியாவின் கணவரை போல பேசி, எனது மனைவியுடன் நீ கள்ளத்தனமாக பேசுவது எனக்கு தெரியும் என்று கூறி அதனால் 10,000 வெள்ளி பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் பயந்த பாதிக்கப்பட்ட அந்த நபர் 4000 வெள்ளி பணத்தை அனுப்பியுள்ளார். அந்தத் தொகையில் 1,100 சிங்கப்பூர் டாலர்களை சர்வணன் ராஜகுமாரிடம் கொடுத்துள்ளார்.

மேலும் மீதி பணத்தை உடனே தரவேண்டும் என்றும், ப்ரியாவின் தம்பி ஒரு ரவுடி என்பதால் உன்னை எளிதில் கண்டுபிடித்துவிடுவான் என்று கூறி மிரட்ட, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இறுதியில், இனி மானம் போனாலும் பரவாயில்லை என்று 7 டிசம்பர் 2020 அன்று அவர் போலீசில் புகார் அளிக்க அன்றைய தினமே சரணனன் மற்றும் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இப்போது மலேசியாவைச் சேர்ந்த ராஜகுமார் சுமுகம் (50) என்பவருக்கு ஜனவரி 14ம் தேதி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts