TamilSaaga
woman arrested

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு – இரு இந்திய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

சிங்கப்பூரில். இந்தியாவின் கொல்கத்தா நகரத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் போலீசாரிடம் சிக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பெண்களில் ஒருவருக்கு சிறை தண்டனையும், மற்றொரு பெண்ணுக்கு அபராதமும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலி தீவு

இந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்று தான் கொல்கத்தா. அந்த நகரில் இருந்து கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி பாலி தீவுகளுக்கு செல்வதற்காக சில இந்தியர்கள் சிங்கப்பூர் வந்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், சிங்கப்பூரில் தரையிறங்கி அதன் பிறகு பாலி செல்ல இருந்தது.

இதற்கு இடையில் அவர்களுடைய விமான பயணத்திற்கான ட்ரான்சிட் நேரம் கொஞ்சம் இருந்த சூழலில், சிங்கப்பூர் அரசாங்கத்தால் குற்றச்சாட்டப்பட்டுள்ள அந்த இரண்டு பெண்களும் சாங்கி விமான நிலையத்தில் இருந்த சில கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முயன்றதாக கூறப்படுகிறது.

சாங்கி விமானநிலையம்

இந்த சூழலில் அந்த இரு பெண்களில் ஒருவர் சாங்கி விமான நிலையம் முனையம் இரண்டில் உள்ள சார்லஸ் & கீத் என்ற கடைக்குள் சென்று, அங்குள்ள பொருட்களை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்த கடையில் இருந்த ஒரு முதுகுப் பையை, தன் வசம் இருந்த ட்ராலியில் வைத்து அவர் எடுத்துச் சென்றிருக்கிறார். மேலும் அதனை அவர் கட்டணத்தை செலுத்தாமல் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த அந்த கடைக்காரர், உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அவரை அழைத்து விசாரித்த பொழுது அவர் அந்த கடையில் இருந்து குறிப்பிட்ட அந்த முதுகுப்பையை திருடியது தெரியவந்துள்ளது.

காதலை ஏற்க மறுத்த பணிப்பெண்.. மிரட்டல் விடுத்த நபர் – சிங்கப்பூர் கோர்ட் எடுத்த நச் முடிவு!

சிறை தண்டனை

இதனை அடுத்து நீதிமன்றத்தில் அவருக்கு சுமார் 700 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல சிம்ரன் என்ற மற்றொரு பெண், சாந்தி விமான நிலையத்தில் இருந்த வேறு ஒரு கடையில் பொருட்களை திருடிய நிலையில் நேற்று திங்கட்கிழமை அவருடைய வழக்கும் விசாரணைக்கு வந்தது. அவருக்கு 8 நாள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பளித்து இருக்கிறது.

சாங்கி விமானநிலையத்தில் திருடிய வழக்கில் இரண்டு இந்திய பெண்கள் கைதாகியுள்ளதுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts