TamilSaaga

Thomson East Coast ரயில் பாதையில் மேலும் 6 நிலையம் திறப்பு – சிங்கப்பூரில் வியாபாரிகள் மகிழ்ச்சி

சிங்கப்பூரில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 8 மாதத்திற்கும் மேலாக Thomson – East Coast ரயில் பாதைகள் திறப்பு தள்ளிச் சென்றது.

தற்போது இந்த ரயில் பாதையின் 6 நிலையங்கள் அடுத்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Springleaf, Bright Hill, Caldecott ஆகிய ரயில் நிலையங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுக்ளது.

இந்த செய்தி அந்த 6 பகுதிகளில் உள்ள வியாபாரிகளை மிகவும் சந்தோசப்பட செய்துள்ளது. கொரோனா தொற்றால் வியாபாரம் இன்றி வருவாய் இழந்து உள்ளதால் மிகுந்த வேதனையில் இருந்தார்கள். தற்போது இரயில் நிலையங்கள் திறக்கப்பட்டால் பயணிகள் வரவு அதிகரிக்கும் அதனால் இழந்த வருவாயை மீண்டும் மீட்டு விடலாம் என்ற மகிச்சியில் உள்ளனர்.

இருந்தாலும் இதனை காரணமாக வைத்து வாடகை ஏற்றப்பட்டு விடக்கூடாது என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது.

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த Thomson – East Coast இரயில் பாதை பணிகள் முழுமையாக நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைவார்கள்.

Related posts