TamilSaaga

EXCLUSIVE: கொடுமையிலும் கொடுமை பெற்ற பிள்ளைக்கு திதி கொடுப்பது.. சிங்கப்பூரில் உயிரிழந்த ஊழியர் மகேஷ்.. கண்ணீருடன் மகனுக்கு காரியம் செய்த தந்தை – “கண்ணுறங்கு மகனே” என்று உருக்கம்!

SINGAPORE: சிங்கப்பூரில் பணியிட விபத்தில் பலியான ஊழியர் மகேஷுக்கு நேற்று சொந்த ஊரில் திதி கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரின் Choa Chu Kang பகுதியில் உள்ள ஒரு Build-To-Order (BTO) திட்ட பணியிடத்தில் கடந்த (ஜூலை 7) forklift விபத்தில் ஒரு தமிழக கட்டுமானத் தொழிலாளி மகேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சகம் (MOM) கூறுகையில், 571-யூனிட் கீட் ஹாங் வெர்ஜ் BTO Project அமைந்துள்ள கீட் ஹாங் லிங்கில் (Keat Hong Link) Site-ல் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டது.

Forklift வாகனத்தின் பின்புற counterweight-ல் நின்று கொண்டு, overhead beam-ல் மின் கேபிளை அந்த ஊழியர் கட்டிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த வாகனம் பின்னோக்கி நகர்ந்துவிட்டது. இதில், forklift-ன் Canopy மற்றும் beam-க்கு இடையில் அந்த ஊழியர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மகேஷ் குறித்து பல தகவல்களை நமது தமிழ் சாகா செய்தி குழுவிற்கு அவரது சகோதரர் சதீஷ் பகிர்ந்து கொண்டார். மகேஷ் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர், இவருக்கு சதீஷ் என்ற அண்ணனும், பிரகாஷ் என்ற தம்பியும் உண்டு. சென்ற ஆண்டு தான் மகேஷின் தம்பி பிரகாஷ் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தம்பியின் மரணம் மகேஷின் குடும்பத்தையே உலுக்கியது.

அதன் பிறகு அதன் பிறகு மெல்ல மெல்ல அந்த துயரத்தில் இருந்து குடும்பம் சகஜ நிலைக்கு திரும்ப, மகேஷுக்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியது. இந்த 2022ம் ஆண்டு முடிவதற்குள் நிச்சயம் மகேஷிற்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்று அந்த குடும்பமே ஆசைப்பட்டது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் தினம் 18 மணி நேரம் வேலை.. மூத்த மகனாக குடும்பத்தையே சுமந்து.. இன்று “Thambi Magazine” எனும் அசைக்க முடியா ஆலமரமாக வளர்ந்து நிற்கும் தமிழன்!

மாப்பிள்ளை நல்ல இடத்தில் வேலை செய்கின்றார் என்பதால் வரங்களும் அதிக அளவில் வந்துள்ளது. ஆனால் இந்த சூழலில் தான் மகேஷ் கடந்த ஜூலை 7ம் தேதி சிங்கப்பூரில் தனது பணியிடத்தில் வேலைபார்த்து வந்த நிலையில் உடல் நசுங்கி பலியானார். இளைய மகனை ஏற்கனவே இழந்த அந்த குடும்பம், தற்போது இரண்டாவது மகனையும் இழந்தது.

இந்நிலையில், நேற்று (ஜுலை.22) மகேஷுக்கு அவரது சொந்த ஊரில் திதி கொடுக்கப்பட்டது. மகேஷின் தந்தைக்கு மொட்டை அடிக்கப்பட, மகனுக்கு அவர் கண்ணீர் மல்க திதி கொடுத்தார்.

பொதுவாக, இந்த உலகத்திலேயே ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், தான் பெற்ற பிள்ளையையே வாரிக்கொடுத்து பெற்றவர்களே காரியம் செய்வது தான் என்று சொல்வார்கள்.

அப்படியொரு கொடுமையை மகேஷின் தந்தை குஞ்சப்பா இருமுறை அனுபவித்துள்ளார். என்னவென்று அவருக்கு ஆறுதல் சொல்வது!? மகேஷுக்கு திதி கொடுத்த புகைப்படங்களை அவரது சகோதரர் சதீஷ் நமது தமிழ் சாகாவிடம் பகிர்ந்து கொண்டார்.

ஏழ்மையில் வாடும் மகேஷின் குடும்பத்துக்கு நமது தமிழ் சாகா வாசகர்கள் உதவலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள மகேஷின் தந்தை குஞ்சப்பா அவர்களின் வங்கிக் கணக்கிற்கு தங்களால் ஆன உதவிகளை செய்யலாம்.

Name : Kunjappa
ACC No :706160496
IFSC Code : TNSC 0011300
THANJAVUR Co-op Bank
Branch : Uranipuram branch

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts