TamilSaaga

தெம்பனீஸ் பகுதியில் தீ விபத்து : 11வது மாடியில் இருந்து குதித்தவர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர் Tampines Ave பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று காலை தீடிர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ப்ளாக்கில் குடியிருந்த 40 பேர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ சம்பவம் குறித்து காலை சுமார் 9.40 மணி அளவில் தகவல் பெற்ற நிலையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து குடிமைத் தற்காப்புப் படை தனது முகநூலில் பதிவிட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. பத்தாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிந்த நிலையில் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் இருந்த ஒருவரை ஜன்னல் மூலமாக வெளியேற்றி காப்பாற்றினர்.

வீட்டின் படுக்கை அறையில் தீ பற்றியதாகவும் அதன்பின்னர் அணைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் அந்த குடியிருப்பு தளத்தில் ஒன்பதாம் முதல் பன்னிரண்டாம் தலம் வரை வசித்த குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையாக காவலர்களால் வெளியேற்றப்பட்டார்கள்.

அப்போதும் 11ம் தளத்தில் இருந்து கீழே குதித்த குடியிருப்பாளர் ஒருவர் தற்போது செங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

Related posts