TamilSaaga

“நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்”.. நம்பிக்கை கொடுத்து 4 மாதத்துக்கு முன்பு சிங்கப்பூர் வந்த தமிழக ஊழியர் – வீட்டுக்கு வந்த டெலிபோன் Call.. ஆசையாய் எடுத்த மனைவிக்கு காத்திருந்த மரண செய்தி!

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சடையன் தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மகன் புஷ்பராஜ். வயது 35. இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், புஷ்பராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் பணி நிமித்தமாக சிங்கப்பூர் வந்தார். இங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து தனது குடும்பத்தினருக்கு அவர் பேசியுள்ளார்.

இந்த சூழலில், கடந்த அக்.19ம் தேதி மாலை, புஷ்பராஜ் அவரது அறையில் இறந்து கிடப்பதாக அவரது சக ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறிய அழுதனர்.

மேலும் படிக்க – “Scoot doubles”… அக்.30 முதல் சிங்கப்பூர் – திருச்சி இடையே தினம் 2 முறை பறக்கலாம் – 236 இருக்கைகளுடன் காத்திருக்கிறது புதிய Airbus A 321 neo

ஏழ்மையான குடும்ப சூழல் காரணமாகத் தான், புஷ்பராஜ் சிங்கப்பூர் வந்து பணியாற்றி இருக்கிறார். “நம்ம குடும்ப கஷ்டம் சிங்கப்பூர் போனா தீர்ந்துவிடும்” என்று தனது மனைவியிடம் சொல்லி கன்வின்ஸ் செய்து தான் சிங்கப்பூர் வந்திருக்கிறார். ஆனால், அவர் மர்மமான முறையில் இருந்திருப்பது கறம்பக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிக மிக ஏழ்மையான நிலையில் உள்ள புஷ்பராஜின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்துதர வேண்டும் என்றும், அவரது உடலை இந்தியா கொண்டுவர மத்திய அரசு, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறந்துபோன புஷ்பராஜ் குறித்து தகவல் தெரிந்தவர்கள், நமது ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ செய்தித் தளத்தை +91 8269 418 418 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அவர்களுக்கு தெரிந்த விவரங்களை பகிரலாம். இதன் மூலம், அவரது உடலை இந்தியா கொண்டு செல்வதற்கு தேவையான முயற்சிகளை நம்மால் எடுக்க முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts