TamilSaaga
lazada grand prize properity sale

சிங்கப்பூரில் 2 வயது குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிய “அதிர்ஷ்ட” தாய்க்கு “50 லட்சம்” லாட்டரி பரிசு – Lazada குலுக்கலில் சுவாரஸ்ய சம்பவம்!

நேரம் நன்றாக இருந்தால், அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் உங்கள் வீடு தேடி வரும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு பெண்மணி, Lunar புத்தாண்டுக்கு முன் தனது இரண்டு வயது மகனுக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்து Lazada அதிர்ஷ்டக் குலுக்கலுக்குத் தகுதி பெற்றதன் மூலம், S$88,888 ரொக்கப் பரிசை தற்போது வென்றிருக்கிறார்.

வரும் மார்ச் மாதத்தில் Lazada-வின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜனவரி 8 முதல் பிப்ரவரி 4 வரையிலான Lazada Prosperity Sale campaign-ன் ஒரு பகுதியாக, இந்த குலுக்கல் நடத்தப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில், அங்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரும் குலுக்கலுக்குத் தகுதிப் பெறுவார்கள்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் நல்லது சொன்ன வீட்டு பணிப்பெண்ணை காட்டுமிராண்டித் தனமாக அடித்த இந்திய முதலாளி – பணக்கார திமிருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு

இந்த நிலையில் தான் Priscilla Tang என்ற அந்த பெண்மணி S$88,888 எனும் பெரும் பணத்தொகையை குலுக்கலில் வென்றுள்ளார்.

Lazada பிரதிநிதி ஒரு லாசாடா சின்னத்துடன் Priscilla வீட்டிற்கே சென்று காசோலையை தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளார்.

Lazada Prosperity விற்பனைக்காக, Priscilla தனது மகனுக்கு பால் பவுடரை ஆர்டர் செய்தார். அது தற்போது அவருக்கு பெரும் பரிசை வென்றுக் கொடுத்துள்ளது.

மொத்தத்தில், Lazada-வில் ஷாப்பிங் செய்த 100 அதிர்ஷ்டசாலிகள், குலுக்கல்லின் ஒரு பகுதியாக ரொக்கத்தையும் பரிசுகளையும் பெற random முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்தத்தில், 100 அதிர்ஷ்டசாலி லாசாடா ஷாப்பர்கள், அதிர்ஷ்ட குலுக்கல்லின் ஒரு பகுதியாக ரொக்கத்தையும் பரிசுகளையும் பெற சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் படிக்க – கேள்வி கேட்டதால் வெடித்த சர்ச்சை.. 100வது ஆண்டை கொண்டாடவிருந்த “சிங்கப்பூர் இந்தியா சங்கம்” இழுத்து மூடல் – இருதரப்பினர் இடையே மோதல்

முதல் 10 வெற்றியாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஒன்பது பேருக்கு தலா S$3,888 ரொக்கப் பரிசையும், ஒரு அதிர்ஷ்டசாலிக்கு S$88,888 பெரும் பரிசையும் பெற்றனர். அந்த பேரதிர்ஷ்டசாலியாக அமைந்தது பிரிசில்லா தான்.

Lazada சிங்கப்பூர் உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் இரவு 8:08 மணிக்கு வெற்றி பெற்ற காசோலைகளை வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கினர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts