TamilSaaga

3 நாட்களாக பசி, தாகத்துடன் மலை இடுக்கில் சிக்கிய இளைஞர்.. படாதபாடுபட்டு மீட்ட இந்திய ராணுவம் – அனைத்து நியூஸ் சேனல்களிலும் “Breaking” Video

கேரளா மாநிலம் குரும்பாச்சி பகுதியின் மலையின் இடுக்கில் சிக்கி தவித்து வந்த இளைஞர் பாபுவை பெரும் போராட்டத்துக்கு பிறகு இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் 3 நண்பர்களுடன் மலையேற்றம் சென்ற பாபு மட்டும் மலை இடுக்கில் சிக்கி மூன்று நாட்களாக தவித்து வந்திருக்கிறார். மலையேறிய போது, கால் இடறி உருண்டு விழுந்ததில் மலையின் இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டார். இந்நிலையில், இன்று (பிப்.9) காலை இந்திய ராணுவம் கயிறு மூலம் அவரை மீட்டுள்ளது.

முதலில் இளைஞரை மீட்கும் பணியில் மாநில மீட்பு படை தோல்வி அடைந்த நிலையில், குன்னூர் வெலிங்டன் முகாமில் இருந்து ராணுவப்படை விரைந்தது. அதன் பிறகும், பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஒருவழியாக கயிறு மூலம் பாதி மயக்கத்தில் இருந்த பாபுவை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

இதையடுத்து, பாபு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts