இந்த டிஜிட்டல் உலகில் இப்படியும் ஒரு நோய் தோன்றி, இந்த உலகையே சில ஆண்டுகள் முடக்க நிலைக்கு கொண்டு வரும் என்று கனவிலும் யாரும் நினைத்திருக்க மாட்டோம். கடந்த 2019ம் ஆண்டு பிற்பகுதியில் துவங்கி, இன்று வரை சுமார் 5 ஆண்டுகள் கடந்து நம்மை பயமுறுத்தி வருகின்றது இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ்.
சீனாவின் வுஹான்
கடந்த 2019ம் ஆண்டு பிற்பகுதியில், சீன நாட்டின் வுஹான் என்ற பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் துவங்கியது இந்த பயங்கரம். சில நாட்களில் தங்கள் எல்லையை சீனா முற்றிலும் மூட, ஆசியா நாடுகளின் அருகில் கூட அந்த நோய் வராது என்று சற்று மிதப்பில் நாம் அனைவரும் இருந்தோம் என்றே கூறலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, கொத்து கொத்தாக மக்கள் இறக்க துவங்கினர்.
சிங்கப்பூரில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் கொரோனாவிற்கு 2000க்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் கிருமியால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல அடுக்கு லாக் டவுன், சோசியல் டிஸ்டன்ஸ், மாஸ்க் என்று தான் சில ஆண்டுகள் நமக்கு நகர்ந்தது. இப்போது அந்த நோய்க்கு எதிராக சில தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்ட நிலையில், மெல்ல மெல்ல அதன் மீதான பயமும், வைரஸின் தாக்கமும் விலகி வருகின்றது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்
இந்த சூழலில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகமும் சில நல்ல தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. நமது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெளியிட்ட அறிக்கையில், சிங்கப்பூரை பொறுத்தவரை தொடர்ச்சியாக கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருவதாக கூறியுள்ளார். ஒரு வார காலத்தில் சுமார் 1500க்கும் குறைவான அளவிலான மக்கள் மட்டுமே கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒன்றுக்கு சுமார் 25,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 1500க்கும் குறைவாக உள்ளதாக அவர் கூறினார். மேலும் நாளொன்றுக்கு சுமார் 180 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
உட்லண்ட்ஸ் கடற்பாலம்.. எச்சரித்த அதிகாரிகள் – அதிகரித்த கூட்டத்தால் பறிபோன உயிர்!
தயார் நிலையில் சிங்கப்பூர்
சிங்கப்பூரை பொறுத்தவரை நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் என்ற அளவில் தான் மக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றாலும், எந்தவிதமனா கடினமான தொற்று சூழல் வந்தாலும் அதை சமாளிக்க சுகாதார அமைச்சகம் தயார் நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மக்களும் அரசு விதிக்கும் விதிகளை கடைபிடித்து, கடிமான நேரங்களில் அரசுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.