TamilSaaga

“தமிழ்” மொழி கற்பிக்கும் ஆசிரியர்களை விருது வழங்கி கௌரவப்படுத்திய சிங்கப்பூர்… தாய்மொழி கருத்தரங்கு மாநாட்டில் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்!

தாய் மொழிகளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தாய்மொழி கருத்தரங்கு சிங்கப்பூரில் நடத்தப்படுவது வழக்கம். இதனை ஒட்டி சிங்கப்பூரில் ஆகஸ்ட் 26ம் தேதி நடத்தப்பட்ட 12வது தாய் மொழி கருத்தரங்கில் பாலர் பள்ளியில் தாய் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில், 15 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கப்பட்டது.

163 ஆசிரியர்களிலிருந்து சிறந்த 15 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாலர் பள்ளி மாணவர்களிடம், தாய் மொழியை கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், மாணவர்களுக்கு தாய் மொழியை சிறப்பாக கற்பிக்க முயற்சி செய்யும் காலர் பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ் மொழி,சீன மொழி மற்றும் மலாய் மொழி, ஆகிய மொழிகளை கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அனுபவம் பெற்று ஆசிரியர்களுக்கு கல்வியாளர்கள் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Related posts