சிங்கப்பூரில் 29 வயதுடைய ஒருவரை அடக்குமுறையில் ஈடுபட்டதாக சந்தேகித்து அதற்கான வழக்கில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சனிக்கிழமை (செப் 18) பிற்பகல் 1.30 மணியளவில், உட்லண்ட்ஸ் இண்டஸ்ட்ரியல் பார்க் E2 இல் அடையாளம் தெரியாத ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து போலீசாருக்கு ஒரு புகார் அறிக்கை வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை மற்றும் போலீஸ் கேமராக்களில் பதிவான படங்களின் உதவியுடன் அந்த நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
புகார் அறிக்கை தயாரிக்கப்பட்ட அதே நாளில் அந்த குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் மீது திங்கள் கிழமை குற்றம் சுமத்தப்படும் என்றும் இது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், தடியடி அல்லது இந்த தண்டனைகளின் கலைவயாகவும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.