TamilSaaga

தந்தையின் வேலை பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல.. பொறுப்பு அதிகரித்துவிட்டது – பிரதமர் லீ

முந்தைய காலங்களில் தந்தை என்பவருக்கு குடும்பத்துக்காக வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கிய பொறுப்பாக இருந்தது. தற்போது மாறிவரும் காலச்சூழலில் தந்தைகளுக்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புகள் அதிகரித்துள்ளதாக பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் தந்தையர்களுக்கு வீட்டில் பொறுப்பும் சவால்களும் சேர்ந்தே உருவாகியுள்ளதாக பிரதமர் கூறினார்.

பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு தாயின் பொறுப்பாக இருந்து வந்த நிலையில் தற்போதைய சூழலில் தந்தைகளுக்கும் குழந்தைகள் வளர்ப்பதில் அதிக பொறுப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகள் வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பிணைப்பை அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளதாக பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

நினைத்து பார்ப்பதை விட மிக சீக்கிரமாக குழந்தைகள் வளர்ந்துவிடுவதால் அவர்களோடு தந்தைகள் ஏற்படுத்தும் நினைவுகளே காலம் முழுதும் நீடித்து நிலைக்கும். தந்தைகள், தாத்தாக்கள் மற்றும் புதிதாக தந்தையாக இருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று தனது முகநூலில் அனைவருக்கும் வாழ்த்துக்களை பிரதமர் லீ தெரிவித்துக்கொண்டார்

Related posts