TamilSaaga

ஜூன்.3 முதல்.. மாற்றி அமைக்கப்பட்ட பாசிர் ரிஸ் பேருந்து முனையம் செயல்படும் – புதிய அறிவிப்பு

சிங்கப்பூர் போக்குவரத்து நடுவம் 2028ம் ஆண்டு கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தற்போது மாற்றியமைக்கப்பட்ட பாசிர் ரிஸ் பேருந்து முனையம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையம் வரும் ஜூன்.3 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

மாற்றியமைக்கப்பட்ட பேருந்து முனையம் அனைத்து வகையிலான வசதிகளையும், அம்சங்களையும் கொண்டதாக தயாராகி உள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்து முனையத்தின் பகுதிகள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பகுதியுடன் இணைக்கப்படும் என்றும் போக்குவரத்து நடுவம் சார்ந்த பணிகள் நடைபெற இந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்து முனையம் வசதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பற்றி ஆணையம் கூறும்போது “பொதுமக்களுக்கு பேருந்து சேவையை பொருத்தமட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஏறி இறங்கும் போது புதிய இடங்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

Related posts