TamilSaaga

சிங்கப்பூரின் கதவுகள் திறந்தாச்சு! இந்திய ஊழியர்கள் இன்று (பிப்.22) முதல் Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதி!

MOM-ன் சமீபத்திய அறிவிப்பின்படி, VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் தகுதியுள்ள பாஸ் வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதிக்கு (Entry Approval) இனி விண்ணப்பிக்கத் தேவையில்லை. நேற்று (பிப்.21) நள்ளிரவு 11:59 மணியோடு அந்த விதிமுறை அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த புதிய நடவடிக்கை மூலம், வேலைவாய்ப்பு பாஸ், Dependent அல்லது எஸ் பாஸ் போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி Entry Approval இல்லாமல் சிங்கப்பூருக்கு வரலாம்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் இருந்து 10 நிமிடம் Video Call பேச 15,000 ரூபாய்” – புதிய “ஆப்” தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகை கிரண்

இந்த புதிய விதிமுறை குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

இன்று முதல் Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் நுழைய நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. MOM அறிக்கையின் படி, Work Permit Holders இந்த திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் படிக்க – சிங்கப்பூருக்கு வந்த புதிய MRT ரயில்கள் – கப்பலில் வந்திறங்கிய அழகு இருக்கே.. அட.. அட.. அட

Work Permit Holders தவிர முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட Long Term Pass holders அதாவது EP எனப்படும் Employment Pass, Dependent’s pass அல்லது S Pass வைத்திருப்பவர்கள் மட்டும் இன்று முதல் நுழைவு அனுமதியின்றி சிங்கப்பூருக்குள் வர முடியும் என்று MOM கூறியுள்ளது.

மீண்டும் MOM அனுமதி அளிக்கும் வரை, Work Permit Holders-களால் சிங்கப்பூர் வர முடியாது. எனினும், கூடிய விரைவில் அவர்களுக்கான கதவுகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts