நமது சிங்கப்பூரின் பெருமையை பறைசாற்றும் பல சின்னங்களில் நமது “Merlion” சிலை மிகமுக்கியமானது. இந்த சிலை கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) அன்று தனது காலாண்டு சுத்தம் செய்யும் பணிகளை ஏற்க இருந்த நிலையில் அந்த சுத்தம் செய்யும் பணி அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Singapore Tourism Board நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறிய தகவலின் அடிப்படையில் “இந்த Merlion சுத்தம் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்ட துப்புரவு நிறுவனம், எதிர்கொண்ட மனிதவளப் பிரச்சினைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது” என்று கூறியுள்ளது. மேலும் அந்த நிறுவனம் குறித்த தகவல்களை STB வெளியிடவில்லை.
இதனால் மெர்லியன் இப்போது செப்டம்பர் 6ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை இரவு 11.30 மணி முதல் காலை 7 மணி வரை சுத்தம் செய்யப்படும். இந்த காலகட்டத்தில் இந்த சிலை முடிவைக்கப்படும் என்றும் பொதுமக்கள் பார்க்க அனுமதியில்லை என்றும் STB தெரிவித்துள்ளது.