TamilSaaga

மலேசியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் : 5 பேர் பலி – 40,000 பேர் முகாமில் தஞ்சம்

வார இறுதியில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் சிலாங்கூர் மற்றும் பகாங்கில் ஐந்து பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மூலம் அறியப்பட்டுள்ளது. இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 20) செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் பஹருதின் மத் தாயிப் ஷா ஆலம் மற்றும் தாமன் ஸ்ரீ மூடாவில் மூன்று பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். இறந்தவர்களில் இருவர் உள்ளூர்வாசிகள் என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் இறந்த மூன்றாவது நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : மண்டியிட்டு அழுத புலம்பெயர்ந்த வீட்டு பணியாளர்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7.50 மணியளவில் நீர்மட்டம் குறையத் தொடங்கிய பின்னர், சிலாங்கூரில் உள்ள ஷா ஆலமில் உள்ள ஆலம் இடமான் குடியிருப்புக்கு அருகில் ஒரு உடல் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக ACP பஹாருடின் முன்னர் மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதுடைய ஒரு மனிதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட அவசர அழைப்பு குறித்து அறிவிக்கப்பட்ட உடனேயே, பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

“கோலாலம்பூரில் வருடாந்திர மழைவீழ்ச்சி 2,400மிமீ ஆகும், இதன் பொருள் (வெள்ளிக்கிழமை) மழை ஒரு மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவை விட அதிகமாக உள்ளது. இது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று மற்றும் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது, ”என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகத்தின் (KASA) பொதுச்செயலாளர் ஜைனி உஜாங் பெர்னாமாவால் மேற்கோள் காட்டப்பட்டது.

வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர், பலர் தங்கள் வாகனங்கள் மற்றும் வீடுகளில் சிக்கியுள்ளனர். மலேசிய தீபகற்பம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 41,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts