TamilSaaga

புது டிரஸ்.. புது ஷூ.. மரணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட “கடைசி Photo”… தூக்கு மேடைக்கு முன்பு சொன்ன “கடைசி வார்த்தை” – சிங்கப்பூரில் இன்று தூக்கிலிடப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர்!

SINGAPORE: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கல்வந்த் சிங், போதை வஸ்து கடத்தல் புகாரில் இன்று (ஜுலை.7) சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த கல்வந்த் சிங், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். வயது 31. இவர் மொத்தம் 181.05 கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் 2016 ஜூன் மாதம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஹெராயின் கடத்தல் குற்றச்சாட்டில் முகமது யாசித் எம்டி யூசோப் மற்றும் நோராஷரீ கௌஸ் ஆகிய மேலும் இரு நபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் யாசித் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், 15 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆனால், கல்வந்த் சிங் மற்றும் நோராஷரீ கௌஸ் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து இருவரும் செய்த மேல் முறையீடு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது. எனவே, 2022 ஜுலை 7ம் தேதி தூக்கு தேதி முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில், கடைசி முயற்சியாக கல்வந்த் சிங் தனது மரணதண்டனைக்கு தடை கோரி நேற்று முன்தினம் விண்ணப்பித்தர். அவர் தனது குற்றவியல் மேல்முறையீட்டை மீண்டும் விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார், அதுமட்டுமின்றி, தனது வழக்கை தானே வாதிட விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து, நேற்று (ஜுலை.6) அவரது விண்ணப்பம், மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நிராகரித்தது. இதனால், இன்று (ஜுலை.7) காலை கல்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில், தூக்கு தண்டனைக்கு முன்பு கடைசியாக எடுக்கப்பட்ட Photoshoot-ல் எடுத்த கல்வந்த் சிங் புகைப்படம் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரின் சமூக ஆர்வலர் கோகிலா அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அவரது குடும்பத்தினர் கடைசியாக கல்வந்த்தை சந்தித்த போது அவருக்கு நான்கு புதிய உடைகள் மற்றும் ஷூஸ் வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த புதிய உடையை அணிந்து தான் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், புது ஷூஸ் அணிந்து corridor-ல் அங்கும் இங்கும் ஓடி மகிழ்ந்தார். குடும்பத்தினருடனான கடைசி சந்திப்பு என்பதால், அவர்களுடன் ஜோக்ஸ்களை பரிமாறி சிரித்து பேசி, குடும்பத்தினரையும் சிரிக்க வைத்தார்.

இறுதியாக தூக்கு மேடைக்கு செல்லும் முன், தனது வழக்கறிஞரிடம், “எல்லாவற்றுக்கும் நன்றி சார். உங்களுடைய எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்த்துகள்” என்று கூறி இன்று காலை கல்வந்த் சிங் விடைபெற்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts