TamilSaaga

“ஸ்பெஷல் பாஸ் பெற உதவிய சிங்கப்பூர் ICA அதிகாரிக்கு இலவச பாலியல் சேவை” – சீன நாட்டு பெண்ணுக்கு 25 வார சிறை

சிங்கப்பூரில் தங்கி வேலை செய்ய விரும்பி ஒரு பாலியல் தொழிலாளி, சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரியிடம் அவருக்கு பாலியல் சேவை வழங்க பணம் கேட்காமல் உடலுறவு கொண்டுள்ளார். 38 வயதான சீனாவைச் சேர்ந்த லியாங் கிங்லானுக்கு இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) 25 வாரச் சிறைத் தண்டனையும் 8,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் ஆசிரியையின் Up-Skirt புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட மாணவன்

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும், பணம் செலுத்திய பாலியல் சேவைகளை வழங்க மூன்று இணையதளங்களைப் பயன்படுத்தியதற்காக பெண்கள் சாசனத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் அவரின் தண்டனையில் பரிசீலிக்கப்பட்டன. சிங்கப்பூரில் வெளிநாட்டவர் தங்குவதை சட்டப்பூர்வமாக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு என்பது, சிங்கப்பூரில் நீதிமன்ற விசாரணைக்கு உதவுதல், நீதிமன்றத்திற்குச் செல்வது மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் ஒருசில நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ICA மற்றும் மனிதவள அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டின் முதல் பாதியில் லியாங் சிங்கப்பூருக்கு சமூக விசிட் பாஸில் வந்ததாக நீதிமன்றம் கூறியது. அவரது பாஸ் காலாவதியானபோது, ​​அவர் அதிக Overstayவில் இருந்து, பாலியல் தொழிலாளியாகத் தொடர்ந்து பணியாற்றினார். இந்நிலையில் தான் லியாங்வுடன் குற்றம் சாட்டப்பட்ட, 48 வயதான ICA சோதனைச் சாவடி இன்ஸ்பெக்டர் தியோ ஹ்வீ பெங் அந்த பெண்ணுக்கு அறிமுகமானார். கடந்த ஜூலை அல்லது ஆகஸ்ட் 2018-ல், லியாங், WeChat மூலம் Teoவைத் தொடர்புகொண்டு, அவர் ஒரு மாதம் Overstayயில் தங்கியிருப்பதாகக் கூறி, சிறப்பு அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு உதவி கோரியுள்ளார்.

டீயோ அந்த பெண்ணிடம் பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் முகவரியைக் கேட்டுள்ளார், மேலும் அந்த பெண்ணுக்கு பாஸ் பெற்றுத்தர உதவ முடியும் ஆனால் அதற்கு ஈடாக ஒரு ஐபோன் வேண்டும் என்று கூறினார், அதை லியாங்கும் ஒப்புக்கொண்டார். ஜூலை மற்றும் அக்டோபர் 2018-க்கு இடைப்பட்ட சமயங்களில் ஒரு இரவு 2.30 மணியளவில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். லியாங் தங்கியிருந்த ஜூரோங் வெஸ்டில் உள்ள பிளாட்டுக்கு டீயோ சென்றார். அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதும் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து ஆணுறை இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அவரது எண்ணத்தை புரிந்துகொண்ட அவர் தன்னுடைய சிறப்புப் பாஸைப் இவர் பெற உதவுவார் என்று எண்ணி அவருக்கு பணம் வாங்காமல் பாலியல் சேவை வழங்கியுள்ளார்.

கடந்த நவம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021-க்கு இடையில், அவர் தனது குடியிருப்பில் போலீசார் சோதனை செய்யும் வரை சுமார் 90 வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்கியுள்ளார். அவர் தனது சம்பாத்தியத்தில் சுமார் S$8,000 சீனாவில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts