TamilSaaga

கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் : மொத்த Vivo சிட்டிக்கும் நடந்த பரிசோதனை – முடிவு என்ன ?

சிங்கப்பூரில் புகழ் பெற்ற விவோ சிட்டி (Vivo City) வளாகத்தில் பலருக்கு கொரோனா கிருமி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் நல்வாய்ப்பாக யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என்ற முடிவுகள் வந்துள்ளது.

மொத்த கடைத் தொகுதியின் ஊழியர்கள், வாடகைதாரர்கள், உதவியாளர்கள் உட்பட 350க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கிருமித் தொற்றுக்கு ஆளான ஒருவர் சென்ற மாதம் 18ஆம் தேதி விவோ சிட்டி கடைத்தொகுதி பகுதிக்கு வந்து சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார அமைச்சகம் இந்த பரிசோதனையை நடத்தியது.

இந்நிலையில் யாருக்கும் தொற்று இல்லை என்ற நிலையில் தற்போது அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. அஜாக்கிரதையாக மக்கள் சிலர் செயல்படுவதால் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

Related posts