TamilSaaga

கனவுகளுடன் அமெரிக்கா கடலுக்கு சென்ற 25 வயது சிங்கப்பூர் இளைஞர்.. கடலில் மூழ்கிய சோகம்.. சடலம் கிடைக்காமல் தவிக்கும் உறவினர்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த 25 வயதான திரு முஹம்மது ஃபுர்கான் முகமது ரஷித் என்பவர் கப்பலில் ஜூனியர் டெக் அதிகாரி ஆவதற்கான தகுதிப் பயிற்சியில் அமெரிக்கா சென்று இருந்தார்.

இந்நிலையில்,கலிபோர்னியாவின் பாயிண்ட் கன்செப்சன் கடற்கரையிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள மொத்த கேரியர் கப்பலில் இருந்து தவறி விழுந்ததில் திரு முஹம்மது ஃபுர்கான் முகமது ரஷித் செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனதாக அமெரிக்க கடலோர காவல்படை கூறியது.

25 வயதான திரு ஃபுர்கான், ஜூனியர் டெக் அதிகாரி ஆவதற்கான தகுதிப் பயிற்சியில் பங்கேற்று, “நம்பிக்கை மற்றும் உற்சவம் நிறைந்து காணப்பட்டார்” என்று அவரது நண்பர் முஹம்மது ஃபரிஸ் புதன்கிழமை அதிகாலை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். “தற்போது கடலில் காணாமல் போன ஒரு அன்பான நண்பருக்கு உங்கள் ஆதரவையும், பிரார்த்தனைகளையும் வேண்டி கனத்த இதயத்துடன் இன்று உங்கள் முன் வருகிறேன்” என்று திரு ஃபாரிஸ் கூறினார்.

திரு ஃபுர்கானின் சகோதரி நூர் அஃபிஃபா முகமது ரஷீத் என்பவரும்சமூக ஊடகங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களை, தனது சகோதரனின் நலனுக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
“தேடல் மற்றும் மீட்பு முயற்சிகள் முழு வீச்சில் உள்ளன, ஆனால் கடலின் பரந்த தன்மை பணியை கடினமானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்கியுள்ளது.” என்று அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,கப்பலில் இருந்து அமெரிக்க கடற்பரப்பில் விழுந்த விழுந்த சிங்கப்பூர் ஆடவரைத் தேடும் பணி 15 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்றிரவு (ஜூன் 21) நிறுத்தப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (எம்எஃப்ஏ) வியாழக்கிழமை பிற்பகல் திரு ஃபுர்கானின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னிய செய்தி நிறுவனமான KSBY குட்டின் படி, அமெரிக்க கடலோர காவல்படை புதன்கிழமை தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை நிறுத்தியதாக தெரியவந்துள்ளது. மீட்பு முயற்சிகள் 200 சதுர கடல் மைல்களுக்கு மேல் நடந்தன என்றும், கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மற்றும் சிறிய படகு குழுவினருடன் ஒரு கப்பல் ஈடுபடுத்தப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

காணாமல் போன நபரை தேடும் பணியை இடையில் நிறுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்பது எங்களுக்கு தெரியும். ஆனால்,காணாமல் போன நபரைக் கண்டுபிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கப்பட்ட பின்பு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த தலைமை வாரண்ட் அதிகாரி ஜான் ரோஸ் கூறினார்.

எங்களின் குழு சார்பாக உறுப்பினரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் இன்று கூறியுள்ளனர்.இந்த கடினமான நேரத்தில் நாங்கள் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து குடும்பத்திற்கு தேவையான தூதரக ஆதரவை வழங்குவோம் என்று சிங்கப்பூர் தூதரகம் கூறியுள்ளது.

Related posts