திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் Exclusive அப்டேட் ஒன்று நமது “தமிழ் சாகா” செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
அதாவது, இதுநாள் வரை திருச்சியில் இருந்து இரவு நேரத்தில் சிங்கப்பூர் கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், இன்று (மார்ச்.30) முதல் காலை விமானங்களாக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் Cashier வேலைக்கு அனுபவமுள்ள பெண் ஊழியர்கள் தேவை – சம்பளம் 3,150 டாலர்
இனி அந்த இரவு விமானங்கள், காலை 9 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். அதேபோல், மாலை 4 மணிக்கு சாங்கி விமான நிலையம் வந்திறங்கும். அதாவது, இதன் பயண நேரம் காலை 9 டூ மாலை 4 மணியாகும்.
வரும் ஏப்ரல்.1 முதல், தடுப்பூசி செலுத்தப்பட்ட அனைத்து பயணிகளும் Entry Approval இன்றி சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பயண நேரம் தற்போது முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள், இதற்கேற்ப தங்கள் பயணங்களை முடிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091