TamilSaaga

புங்கோல் பகுதி நடைபாதையில் 46 வயது நபர் கொலை – சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது

சிங்கப்பூரில் உள்ள புங்கோல் பகுதி நடைபாதையில் 46 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோலை செய்யப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்தில் கொலை செய்யப்பட்ட நபர் கத்தியால் குத்தப்பட்டு காயங்களுடன் அங்கேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஜீலை.14) மாலை 3 மணியளவில் காவல்துறை இந்த கொலை சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 43 வயது மதிப்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் கொலை செய்யப்பட்டவரும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் கூறப்படுகின்றன.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட உடன் அதற்கான தண்டனை அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts