TamilSaaga

சிங்கப்பூரில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய 69 வயது முதியவர்… பயந்துபோய் நீதிமன்றத்தை நாடிய பெண்!

சிங்கப்பூரில் வயது முதிர்ந்த முதியவர்களை கவனித்துக் கொள்வதற்காக பணிப்பெண்களை நியமிப்பது வழக்கம். அதே போல் சிங்கப்பூரைச் சேர்ந்த டான் ஜக் என்ற 69 வயது முதியவருக்கு பணிவிடை செய்வதற்காக இந்தோனேசியாவை சேர்ந்த 45 வயது பெண், பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். முதுமை மறதியால் பாதிக்கப்பட்டுள்ள அவரை கவனித்துக் கொள்வதற்காக அந்த பெண் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பணிப்பெண் தூங்கியதும் அவரிடம் டான் தவறாக நடந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். எனவே, பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் மானபங்கப்படுத்துதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளோடு மேலும் 6 குற்றச்சாட்டுகள் இவர் மீது சேர்க்கப்பட்டுள்ளன.

பொதுவாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிங்கப்பூர் நீதிமன்றம் 8 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிரம்படியும் தண்டனையாக விதிக்கும். ஆனால் 50 வயதை கடந்தவர்களுக்கு சிங்கப்பூரில் பிரம்படி விதிக்கப்படாது என்பதால் முதியவருக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது. 69 வயது முதியவர் சிங்கப்பூரில் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related posts