TamilSaaga

சிங்கப்பூரில் 61 பேருக்கு அபராதம் – கடற்கரை, பூங்காவில் கொரோனா தடுப்பு விதிமீறல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரை, பூங்காக்கள், உணவு மற்றும் பானக்கடைகள் போன்ற பல்வேறு மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.

இந்த சூழலில் பூங்காக்கள் மற்றும் கடற்கரையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 61 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாக வரக்கூடிய பகுதிகளில் அதிகமான அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் விதிமீறல்களில் ஈடுபடும் வர்த்தக மையங்கள் மூடப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருகின்ற ஜூன் 21 திங்கட்கிழமை முதல் உணவு, பானக் கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் விதிமுறைகளுடன் கூடிய தளர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts