TamilSaaga

சிங்கப்பூரில் வீட்டை உடைத்து திருட்டு.. 57 வயது முதியவர் கைவரிசை – கைது செய்து சிறையில் அடைப்பு

சிங்கப்பூரில் வீடு புகுந்து திருடிய வழக்கில் 57 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்.8) போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில், ஜூ சியட் அருகே கார்ப்மெயில் சாலையில் அமைந்துள்ள ஒரு யூனிட் வீட்டை உடைத்ததாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

குற்றம் பதிவான 15 நிமிடங்களுக்குள் அந்த நபர் ஓனான் சாலையில் காவலில் வைக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து S $ 1,890 ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் இதே போன்ற மற்றொரு வீடு உடைப்பு மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

அவர் மீது திங்கள்கிழமை வீடு புகுந்து திருடியதாக குற்றம் சாட்டப்ப்பட்டு நீதிமன்றம் கொண்டு செல்லப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Related posts