TamilSaaga

25 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 5.5 லட்சம் பரிசு…. வெளிநாட்டு தமிழரின் கதவைத் தட்டிய அதிர்ஷ்ட லட்சுமி!

தனது குடும்பத்தை விட்டு, வாழ்க்கையை தொலைத்து வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எப்பொழுதாவது அடிக்கும் அதிர்ஷ்ட காற்று உலகெங்கிலும் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்க தான் செய்கிறது. அப்படி ஒரு அதிர்ஷ்டம் தான் துபாயில் வாழும் தமிழருக்கு அரங்கேறி உள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டின் ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவருக்கு லாட்டரியில் லம்பாக பரிசுத்தொகை அடித்துள்ளது.

இந்த லாட்டரி மூலம் அவருக்கு 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆண்டிற்கு 5.5 லட்சம் பரிசாக கிடைக்கும் என்று லாட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக லாட்டரியில் பரிசாக பெரியதாக ஒரு தொகை கிடைக்கும். ஆனால் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் இந்த தொகையானது அவருக்கு பெரிதாக உபயோகப்படும் என மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் லைஃப் டைம் செட்டில்மென்ட் போல அவருக்கு தொடர்ந்து கிடைப்பதால் தனது வருங்காலத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நான் எனது வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். கல்வி முதல் வேலை வரை அனைத்தும் மற்றவர்களின் உதவியுடன் கஷ்டப்பட்டு தேடிக் கொண்டேன். எனக்கு உதவி செய்த சமுதாயத்திற்கு உதவி செய்யும் அதிர்ஷ்டத்தை கடவுள் வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பணத்தின் மூலம் சமூகத்திற்கு பல உதவிகள் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

Related posts